search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்
    X

    திண்டுக்கல்லில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

    திண்டுக்கல்லில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் குட்கா, போதை பாக்குகள் தடை செய்யப்பட்டபோதும் பல இடங்களில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் சோதனை நடத்தி இவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தபோதும் குட்கா விற்பனையை தடுக்க முடியவில்லை.

    குடைப்பாறைப்பட்டி பகுதியில் வீடுகளில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி எஸ்.பி. தனிப்படை சப்-இன்ஸ் பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கியது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக சரவணன் (வயது35) என்பரை கைது செய்து தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×