என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொத்துவரி அதிகரிப்பால் குடிநீர் கட்டணம் கடுமையாக உயர்வு
Byமாலை மலர்16 Sep 2018 7:40 AM GMT (Updated: 16 Sep 2018 10:12 AM GMT)
சொத்து வரி உயர்வை தொடர்ந்து குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் சொத்து வரியை 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த வரி உயர்வு வருகிற அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது. சென்னை மாநகராட்சியில் குடியிருப்புகளுக்கான சொத்து வரி பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சொத்து வரி உயர்வை தொடர்ந்து குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுவரை ரூ.300 கட்டணம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் ரூ.180 கூடுதலாக சேர்த்து ரூ.480 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆனால் குடிநீர் கட்டணம் பல மடங்கு கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
தற்போது கட்டண விவரங்கள் பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த அரையாண்டு கட்டணத்திலும் இப்போது பலமடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த எஸ்.எம்.எஸ்.சை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் குடிநீர் கட்டணம் செலுத்த அளிக்கப்படும் காலக்கெடு முடிந்தாலும் சில நாட்கள் விலக்கு அளிக்கப்படும் . அதன்பின்பு கட்டணம் ெலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும்.
ஆனால் தற்போது நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவை தாண்டினாலே அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் சொத்து வரியை 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த வரி உயர்வு வருகிற அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது. சென்னை மாநகராட்சியில் குடியிருப்புகளுக்கான சொத்து வரி பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சொத்து வரி உயர்வை தொடர்ந்து குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுவரை ரூ.300 கட்டணம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் ரூ.180 கூடுதலாக சேர்த்து ரூ.480 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆனால் குடிநீர் கட்டணம் பல மடங்கு கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
தற்போது கட்டண விவரங்கள் பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த அரையாண்டு கட்டணத்திலும் இப்போது பலமடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த எஸ்.எம்.எஸ்.சை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் குடிநீர் கட்டணம் செலுத்த அளிக்கப்படும் காலக்கெடு முடிந்தாலும் சில நாட்கள் விலக்கு அளிக்கப்படும் . அதன்பின்பு கட்டணம் ெலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும்.
ஆனால் தற்போது நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவை தாண்டினாலே அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X