என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கோவிலூரில் குழந்தைகளுடன் தாய் தீயில் கருகி உயிரிழப்பு - தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் கைது
Byமாலை மலர்14 Sep 2018 10:08 AM GMT (Updated: 14 Sep 2018 10:27 AM GMT)
திருக்கோவிலூரில் குழந்தைகளுடன் தாய் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி(30). இவர்களுக்கு கமலேஸ்வரன்(7), விஷ்ணுப்பிரியன்(4) மற்றும் ருத்திரன் என்கிற 4 மாத கைக்குழந்தையும் இருந்தது.
இளங்கோவன் தனது குடும்பத்துடன் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 10-ந்தேதி கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த தனலட்சுமி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது 3 குழந்தைகளுடன் கீழக்கொண்டூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்தநிலையில் தனலட்சுமி, அவரது குழந்தைகள் கமலேஸ்வரன், விஷ்ணுப்பிரியன், ருத்திரன் ஆகிய 4 பேரும் அங்குள்ள குடிசை வீட்டில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளங்கோவன் தினசரி குடித்து விட்டு வந்து தனலட்சுமியை அடித்து, உதைத்து, பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தியதாக தெரிந்தது.
இதனால் தனலட்சுமி மாமனார் வீட்டுக்கு வந்து மாமனார் ராமசாமியிடமும், மாமியார் வேங்கையம்மாளிடமும் இளங்கோவன் கொடுமைப்படுத்துவது பற்றி கூறி கதறி அழுதுள்ளார். ஆனால் அவர்கள் இளங்கோவனை கண்டிக்காமல், தனலட்சுமிக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இதில் மனமுடைந்த தனலட்சுமி, தனது 3 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தனலட்சுமி மற்றும் அவரது 3 குழந்தைகளின் சாவுக்கு காரணமான இளங்கோவன், வேங்கையம்மாள், ராமசாமி ஆகியோரை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் இளங்கோவன், ராமசாமி, வேங்கையம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி(30). இவர்களுக்கு கமலேஸ்வரன்(7), விஷ்ணுப்பிரியன்(4) மற்றும் ருத்திரன் என்கிற 4 மாத கைக்குழந்தையும் இருந்தது.
இளங்கோவன் தனது குடும்பத்துடன் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 10-ந்தேதி கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த தனலட்சுமி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது 3 குழந்தைகளுடன் கீழக்கொண்டூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்தநிலையில் தனலட்சுமி, அவரது குழந்தைகள் கமலேஸ்வரன், விஷ்ணுப்பிரியன், ருத்திரன் ஆகிய 4 பேரும் அங்குள்ள குடிசை வீட்டில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளங்கோவன் தினசரி குடித்து விட்டு வந்து தனலட்சுமியை அடித்து, உதைத்து, பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தியதாக தெரிந்தது.
இதனால் தனலட்சுமி மாமனார் வீட்டுக்கு வந்து மாமனார் ராமசாமியிடமும், மாமியார் வேங்கையம்மாளிடமும் இளங்கோவன் கொடுமைப்படுத்துவது பற்றி கூறி கதறி அழுதுள்ளார். ஆனால் அவர்கள் இளங்கோவனை கண்டிக்காமல், தனலட்சுமிக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இதில் மனமுடைந்த தனலட்சுமி, தனது 3 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தனலட்சுமி மற்றும் அவரது 3 குழந்தைகளின் சாவுக்கு காரணமான இளங்கோவன், வேங்கையம்மாள், ராமசாமி ஆகியோரை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் இளங்கோவன், ராமசாமி, வேங்கையம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X