என் மலர்
செய்திகள்

குத்தாலம் அருகே பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
குத்தாலம் அருகே பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்த பண்டார வாடை கிராமம் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கலைவாணன் (வயது 35). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பெரம்பூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் கலைவாணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கலைவாணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலைவாணனை பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் உத்தரவை கடலூர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
Next Story






