search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் திமுக செயற்குழு கூட்டம்
    X

    பெரம்பலூரில் திமுக செயற்குழு கூட்டம்

    பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.  கட்சி அலுவலகத்தில் ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் சுத்தரத்தினம் தலைமை  தாங்கினார். துணை செயலாளர்கள் ஆதித்யன், பூமதி, பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் பேசு கையில், அ.தி.மு.க.  ஆட்சியில் எந்தவித திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. முதல்வர் முதல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவரும் மக்களை பற்றி சிந்திக்காமல் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். வெகு விரைவில் மக்கள் அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி யெறிய உள்ளனர். தி.மு.க. ஆட்சியின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும். 

    எனவே தி.மு.க.வினர் கடுமையாக உழைத்து வரும் தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க அனைவரும் பாடுபடவேண்டும் என்றார்.

    இதில் பூத் கமிட்டி அமைத்தல், கட்சி பணி, செயல்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிப்பது, தி.மு.க. தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கூட்டத்தில் பொறுப்பாளர்கள் ஆனந்தராஜன், ராமச்சந்திரன், சிவக்குமார், வக்கீல் கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் கலையரசன், லாடபுரம் செம்புலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.
    Next Story
    ×