என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாணார்பட்டி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சாணார்பட்டி, கோபால்பட்டி, செந்துறை, முளையூர், பரளி, மணக்காட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த 4 வருடங்களாகவே இப்பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த பகுதி தேங்காய்கள் செழிப்பாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதியும் குறையத் தொடங்கியுள்ளது.
இது குறித்து மா, புளி தென்னை விவசாய சங்க தலைவர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது கூறுகையில், இப்பகுதி தேங்காய்களின் தரத்துக்காக வெளியூர்களில் இருந்து அதிக அளவு வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்தனர்.
தற்போது வறட்சியின் காரணமாக தென்னை சாகுபடி நிலங்கள் குறைந்து விட்டது. விளைச்சல் குறைவாக இருந்தபோதும் விலையும் கிடைக்காததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் தண்ணீர் போதிய அளவு இல்லாததால் தேங்காய்களும் சிறிதாக உள்ளது. வியாபாரிகள் இவற்றை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
எனவே அரசு இப்பகுதி விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்