என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் காண்டிராக்டரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த பெண்
Byமாலை மலர்8 Sep 2018 7:09 AM GMT (Updated: 8 Sep 2018 7:09 AM GMT)
திருப்பூரில் காண்டிராக்டரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக வங்கியின் முன்னாள் மேலாளர் மற்றும் புரோக்கர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பில்டிங் காண்டிராக்டர். இவருக்கு முத்தனம்பாளையம் என்ற பகுதியில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டை திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அடகுவைத்து ரூ. 14 லட்சம் கடன் பெற்றார்.
பணத்தை கொடுத்த பைனான்ஸ் நிறுவனம் பணத்தை திருப்பி கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த புரோக்கர் செல்வகுமார் என்பவர் அறிமுகமானார்.
செல்வகுமார் காண்டிராக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் தனக்கு தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் வங்கி கடன் பெற்று தருகிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி திருப்பூர் பழைய பஸ்நிலையம் பின்புறம் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு கிருஷ்ணமூர்த்தியை செல்வகுமார் அழைத்து சென்றார். அந்த வங்கியின் மேலாளராக இருந்த சிலம்புசெல்வி என்பவர் கடன் தருவதாக கூறி பல ஆவணங்களில் கையெழுத்து பெற்றார். மொத்தம் ரூ.54 லட்சத்து 50 ஆயிரம் கடன் ஒதுக்கிய அவர் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதி பணம் ரூ.37 லட்சத்தை புரோக்கர் செல்வகுமாருடன் பங்குபோட்டு கொண்டார்.
இந்த நிலையில் சிலம்புசெல்வி சென்னைக்கு மாறுதலாகி சென்று விட்டார். வங்கியில் இருந்து காண்டிராக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.54லட்சத்து 50 ஆயிரம் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு வந்து தான் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் தான் கடன் வாங்கினேன் என்றார். ஆனால் வங்கி அதிகாரிகள் ரூ.54 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருப்பதை காட்டினர்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வங்கியின் முன்னாள் மேலாளர் சிலம்புசெல்வி, புரோக்கர் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பில்டிங் காண்டிராக்டர். இவருக்கு முத்தனம்பாளையம் என்ற பகுதியில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டை திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அடகுவைத்து ரூ. 14 லட்சம் கடன் பெற்றார்.
பணத்தை கொடுத்த பைனான்ஸ் நிறுவனம் பணத்தை திருப்பி கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த புரோக்கர் செல்வகுமார் என்பவர் அறிமுகமானார்.
செல்வகுமார் காண்டிராக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் தனக்கு தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் வங்கி கடன் பெற்று தருகிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி திருப்பூர் பழைய பஸ்நிலையம் பின்புறம் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு கிருஷ்ணமூர்த்தியை செல்வகுமார் அழைத்து சென்றார். அந்த வங்கியின் மேலாளராக இருந்த சிலம்புசெல்வி என்பவர் கடன் தருவதாக கூறி பல ஆவணங்களில் கையெழுத்து பெற்றார். மொத்தம் ரூ.54 லட்சத்து 50 ஆயிரம் கடன் ஒதுக்கிய அவர் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதி பணம் ரூ.37 லட்சத்தை புரோக்கர் செல்வகுமாருடன் பங்குபோட்டு கொண்டார்.
இந்த நிலையில் சிலம்புசெல்வி சென்னைக்கு மாறுதலாகி சென்று விட்டார். வங்கியில் இருந்து காண்டிராக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.54லட்சத்து 50 ஆயிரம் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு வந்து தான் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் தான் கடன் வாங்கினேன் என்றார். ஆனால் வங்கி அதிகாரிகள் ரூ.54 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருப்பதை காட்டினர்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வங்கியின் முன்னாள் மேலாளர் சிலம்புசெல்வி, புரோக்கர் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X