search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
    X

    ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் யசோந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வாசுதேவன், மாவட்ட அமைப்பு செயலாளர் கந்தசாமி மற்றும் தலைமையாசிரியர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,000 -க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்களையும் உடனே நிரப்ப நீட் மற்றும் ஜே.இ.இ.போட்டித் தேர்வுகளுக்கு ஆசிரியர்களை பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைமையிட செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் சசிகுமார் சிறப்புரையாற்றினார். இறுதியாக மாவட்ட பொருளாளர் சரவணன் நன்றியுரை கூறினார்.
    Next Story
    ×