என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்7 Sep 2018 12:11 PM GMT (Updated: 7 Sep 2018 12:11 PM GMT)
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் யசோந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வாசுதேவன், மாவட்ட அமைப்பு செயலாளர் கந்தசாமி மற்றும் தலைமையாசிரியர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,000 -க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்களையும் உடனே நிரப்ப நீட் மற்றும் ஜே.இ.இ.போட்டித் தேர்வுகளுக்கு ஆசிரியர்களை பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைமையிட செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் சசிகுமார் சிறப்புரையாற்றினார். இறுதியாக மாவட்ட பொருளாளர் சரவணன் நன்றியுரை கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X