search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கூடாது - ஐகோர்ட் அதிரடி
    X

    நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கூடாது - ஐகோர்ட் அதிரடி

    சென்னையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Encroachments #FloodRelief #HighCourt #TNGovt
    சென்னை:

    அயனாவரம் குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள், நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பதால் தங்களுக்கு அங்கு பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    இந்நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது கடும் குற்றம். நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களுக்கு பட்டா தர உத்தரவிட முடியாது. நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும், சென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற வேண்டும் என சென்னை  மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர். #Encroachments #FloodRelief #HighCourt #TNGovt
    Next Story
    ×