search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்குளி அருகே மாமனாரை குத்தி கொன்ற மருமகன் கைது
    X

    ஊத்துக்குளி அருகே மாமனாரை குத்தி கொன்ற மருமகன் கைது

    ஊத்துக்குளி அருகே மாமனாரை குத்தி கொன்ற மருமகன் கைது கடனை திருப்பி தராததால் கொன்றதாக வாக்கு மூலம்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள மொலக் கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் (54) சத்துணவு ஊழியர். இவரது மகள் வனிதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்தருக்கும் திருமணம் நடைபெற்றது. கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து வனிதா தனது தந்தை சுந்தரேசனுக்கு தகவல் தெரிவித்தார்.அவர் தகராறை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசந்தர் கத்தியால் சுந்தரேசனை குத்தினார். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார்.

    இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசந்தரை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

    எனது மாமனார் சுந்தரேசன் என்னிடம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள ரூ. 30 ஆயிரத்தை வாங்கி தரும்படி மனைவியிடம் தெரிவித்தேன். அவர் வாங்கி தர மறுத்தார். இதனால் மனைவியிடம் தகராறு செய்தேன். அவர் தனது தந்தைக்கு போன் செய்தார். இதனை தொடர்ந்து சுந்தரேசன் எனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் எனக்கும் தகராறு உருவானது. அவரை கத்தியால் குத்தினேன். இதில் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×