search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியம்பட்டி அருகே டிராக்டரில் சிக்கி 2 வயது குழந்தை பலி
    X

    புளியம்பட்டி அருகே டிராக்டரில் சிக்கி 2 வயது குழந்தை பலி

    புளியம்பட்டி அருகே டிராக்டர் மூலம் விவசாயி ஒருவர் எரு அள்ளிய போது விளையாடி கொண்டிருந்த 2 வயது மகன் டிராக்டரில் சிக்கி பரிதாபமாக இறந்தான்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள மேலபூவாணியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். விவசாயி. இவரது 2 வயது மகன் சந்திரசேகர். நேற்று சண்முகசுந்தரம் டிராக்டர் மூலமாக விவசாயத்திற்கு எரு அள்ளும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது குழந்தை சந்திரசேகர் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். சண்முகசுந்தரம் டிராக்டரை பின்னோக்கி எடுத்த போது எதிர்பாராத விதமாக குழந்தை சந்திரசேகர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கினான். இதில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    இதுபற்றி புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×