search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்
    X

    தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்த நிலை ஒருவாரம் நீடிக்கும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வானம் மேக கூட்டமாக இருக்கும். சில நேரங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

    இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரம் பெய்த மழை அளவு வருமாறு:-

    செஞ்சி 4 செ.மீ., மதுரை விமானநிலையம், பூண்டி தலா 3 செ.மீ., புதுச்சேரி, பெருங்களூர் தலா 2 செ.மீ., திருத்தணி, சிவகங்கை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    Next Story
    ×