என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி
Byமாலை மலர்1 Sep 2018 5:46 PM GMT (Updated: 1 Sep 2018 5:46 PM GMT)
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே உள்ளது கேர்பெட்டா. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளுக்கு நடுவில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.
மேலும் கேர்பெட்டாவில் செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர். இதையடுத்து அந்த இடத்தில் கோத்தகிரி தாசில்தார் நேரில் ஆய்வு செய்து, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்து, கேர்பெட்டாவில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி பெற்றது. இதையடுத்து அந்த பணி போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8 மணிக்கு செல்போன் கோபுரம் அமைக்கப்படும் இடத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அலெக்சாண்டர், கவுதம், நசீர், நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், கோர்ட்டு உத்தரவு பெறப்பட்டு உள்ளதால் பணிகளை தடுத்து நிறுத்துவது சட்டப்படி குற்றம். வேண்டுமென்றால் ஐகோர்ட்டில் பொதுமக்கள் சார்பில் மனு தாக்கல் செய்து செல்போன் கோபுரம் அமைக்க தடை உத்தரவு பெறலாம். மேலும் மாவட்ட கலெக்டரிடம் குடியிருப்பு பகுதி அல்லாமல் வேறு இடத்தில் செல்போன் கோபுரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்கலாம் என்று யோசனை கூறினர். இதை கேட்டறிந்த பொதுமக்கள், எங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவிக்கவே திரண்டோம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்களது நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர்.
கோத்தகிரி அருகே உள்ளது கேர்பெட்டா. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளுக்கு நடுவில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.
மேலும் கேர்பெட்டாவில் செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர். இதையடுத்து அந்த இடத்தில் கோத்தகிரி தாசில்தார் நேரில் ஆய்வு செய்து, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்து, கேர்பெட்டாவில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி பெற்றது. இதையடுத்து அந்த பணி போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8 மணிக்கு செல்போன் கோபுரம் அமைக்கப்படும் இடத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அலெக்சாண்டர், கவுதம், நசீர், நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், கோர்ட்டு உத்தரவு பெறப்பட்டு உள்ளதால் பணிகளை தடுத்து நிறுத்துவது சட்டப்படி குற்றம். வேண்டுமென்றால் ஐகோர்ட்டில் பொதுமக்கள் சார்பில் மனு தாக்கல் செய்து செல்போன் கோபுரம் அமைக்க தடை உத்தரவு பெறலாம். மேலும் மாவட்ட கலெக்டரிடம் குடியிருப்பு பகுதி அல்லாமல் வேறு இடத்தில் செல்போன் கோபுரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்கலாம் என்று யோசனை கூறினர். இதை கேட்டறிந்த பொதுமக்கள், எங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவிக்கவே திரண்டோம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்களது நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X