என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேதராப்பட்டில் கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்1 Sep 2018 11:41 AM GMT (Updated: 1 Sep 2018 11:41 AM GMT)
சேதராப்பட்டில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
சேதராப்பட்டு:
வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் காலனியை சேர்ந்தவர் கோபி. கூலித்தொழிலாளி. இவரது மகள் சுஷ்மிதா. (வயது 19). இவர் சேதராப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-வது ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து சுஷ்மிதா தனது தோழிகளுடன் வீட்டுக்கு செல்ல சேதராப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அப்போது சுஷ்மிதா திடீரென மாயமானார்.
வெகு நேரமாக சுஷ்மிதா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால், எங்கு தேடியும் சுஷ்மிதா இல்லை.
இதையடுத்து அவரது தாய் ஜோதி தனது மகள் மாயமானது குறித்து சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து சுஷ்மிதா காதல் வலையில் விழுந்து காதலனோடு சென்றாரா? அல்லது அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X