search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு தெற்கு மாவட்ட காங். சார்பில் கேரளாவுக்கு வெள்ள நிவாரணப்பொருட்கள்
    X

    ஈரோடு தெற்கு மாவட்ட காங். சார்பில் கேரளாவுக்கு வெள்ள நிவாரணப்பொருட்கள்

    ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    ஈரோடு, ஆக. 27-

    கேரளாவில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    அரசியல் கட்சியினர் தன்னார்வ தொண்டு அமைப்புகள் என பாகுபாடின்றி கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர் காங்கிரஸ் கட்சி சார்பிலும் கேரளா மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னிமலை ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாவட்ட பொருளாளர் ரவி மாவட்ட பொதுச் செயலாளர் சீதாபதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் லோகேஸ் வரன், மனித உரிமைகள் துறையின் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், செயற்குழு உறுப்பினர் ஜனனிசதிஷ், ஆரிப்அலி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். * * * நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் உள்பட பலர் அருகில் உள்ளனர்.

    Next Story
    ×