என் மலர்
செய்திகள்

மக்கள் நீதி மய்யம் சார்பில் கடலூருக்கு வெள்ள நிவாரண பொருட்கள்
கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆறு கரையோர பகுதிகளில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி கொள்ளிடம் ஆறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிப்படைந்த மக்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர் தலைமையில் ஜவகர், அலெக்ஸ், நடராஜன், சிவக்குமார், பாலா, யோகேஷ், ரவீந்திரன், பால்ராஜ், ரத்தினகுமார், அக்பர், வக்கீல்கள் ரங்கநாதன், ரமேஷ், பிரகாஷ், மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் அரிசி, பிஸ்கெட், துணி மணிகள், பெட்சீட், காய்கறிகள் உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பொருட்கள் மாவட்டம் முழுவதிலும் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்டு கடலூருக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி கொள்ளிடம் ஆறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிப்படைந்த மக்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர் தலைமையில் ஜவகர், அலெக்ஸ், நடராஜன், சிவக்குமார், பாலா, யோகேஷ், ரவீந்திரன், பால்ராஜ், ரத்தினகுமார், அக்பர், வக்கீல்கள் ரங்கநாதன், ரமேஷ், பிரகாஷ், மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் அரிசி, பிஸ்கெட், துணி மணிகள், பெட்சீட், காய்கறிகள் உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பொருட்கள் மாவட்டம் முழுவதிலும் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்டு கடலூருக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story






