search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரமணியில் வங்கி மேலாளரிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது
    X

    தரமணியில் வங்கி மேலாளரிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது

    சென்னை தரமணியில் வங்கி மேலாளரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    தரமணி சர்தார் பட்டேல் சாலையை சேர்ந்தவர் உமர் அகமது கான். அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த 10-ந்தேதி தேனாம்பேட்டையில் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்ல ஆட்டோவுக்காக மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் உமர் அகமது கானை கத்தி முனையில் மிரட்டி அவரிட மிருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசில் உமர் அகமது கான் புகார் செய்தார். கொள்ளையர்கள் வந்த ஆட்டோவின் எண்ணையும் போலீசில் கொடுத்தார். அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி செல்போனை பறித்த ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா, நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கோபிநாத் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×