என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வீ.கே. புதூர் தாலுகா மக்கள் சார்பில் கேரளா மக்களுக்கு நிவாரண பொருட்கள்
சுரண்டை:
நெல்லை மாவட்ட கலெக்டரின் வேண்டுகோளின் படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு வீ.கே.புதூர் தாலுகா சார்பில் நிவாரண பொருட்கள் வழங்க வீ.கே. புதூர் தாசில்தார் நல்லையா கேட்டுக்கொண்டார். அதன்படி வீ.கே. புதூர் தாலுகா மக்களின் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
அதன்பேரில் பொது மக்கள் அரிசி, கோதுமை மாவு, மைதா, ரவை, குடிநீர் பாட்டில்கள், குளியல் சோப், துணி துவைக்கும் சோப், பவுடர், கொசுவர்த்தி சுருள், கொசு விரட்டி, மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, தலையணை, போர்வை, டீத்தூள், காபித் தூள், பால் பவுடர், சானிடரி நாப்கின், துணிகள், நிலக்கடலை, பயறு வகைகள், தேங்காய் எண்ணெய், ரஸ்க், பிஸ்கட், டார்ச், பேட்டரி ஆகிய பொருட்களை (பயன்படுத்திய ஆடைகளை தவிர்த்து) வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் வந்து நேரில் சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தாராளமாக வழங்கினர்.
அதனை தாசில்தார் நல்லையா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். கலெக்டர் அலுவலகம் மூலமாக அவை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்