என் மலர்
செய்திகள்

திருச்சியில் மணப்பெண் மாயமானதால் திருமணம் நிறுத்தம்
திருச்சி அருகே மணப்பெண் மாயமானதால் திருமணம் நிறுத்தப்பட்டது. மணப்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 55), ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்.
இவரது மகள் மோனிகா (21) . இவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு திடீரென மோனிகா மாயமானார்.
இது குறித்து அவரது தந்தை பாலக்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மோனிகா எங்கு சென்றார் , திருமணம் பிடிக்காமல் சென்றாரா? அல்லது யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 55), ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்.
இவரது மகள் மோனிகா (21) . இவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு திடீரென மோனிகா மாயமானார்.
இது குறித்து அவரது தந்தை பாலக்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மோனிகா எங்கு சென்றார் , திருமணம் பிடிக்காமல் சென்றாரா? அல்லது யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.
Next Story






