search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை நகர பகுதியில் வாஜ்பாய் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி
    X

    புதுவை நகர பகுதியில் வாஜ்பாய் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி

    இன்று வாஜ்பாய் அஸ்தி புதுவை நகர பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரதத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    புதுச்சேரி:

    மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் புனித நதிகளிலும், கடலிலும் கரைக்கப்பட உள்ளது.

    இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் பா.ஜனதா நிர்வாகிகள் அஸ்தியை கொண்டுவந்துள்ளனர். இந்த அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவைக்கு அஸ்தியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் விமானம் மூலம் புதுவைக்கு நேற்று கொண்டுவந்தார்.

    விமான நிலையத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அஸ்தியை உழவர்கரை நகராட்சி, அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம் ஆகிய கொம்யூன் பகுதிகளுக்கு கொண்டுசென்றனர். அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் இன்று வாஜ்பாய் அஸ்தி புதுவை நகர பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரதத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்டது. நெல்லித் தோப்பு லெனின்வீதி காமராஜர் சிலை அருகிலும், உருளையன்பேட்டை கட்சி அலுவலகம், முத்தியால் பேட்டை மணிக்கூண்டு, நேருவீதி, காந்திவீதி சந்திப்பு, புஸ்சி வீதி மணிக்கூண்டு, உழவர் சந்தை, முதலியார்பேட்டை வானொலி திடல் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி ரதம் வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று மாலை வில்லியனூர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரதம் செல்கிறது. நாளை பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து அஸ்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரை சாலை காந்தி திடலின் பின்புறம் கடலில் கரைக்கப்படுகிறது.

    Next Story
    ×