என் மலர்

    செய்திகள்

    கோவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விபத்தில் பலி
    X

    கோவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விபத்தில் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவையில் மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பாலக்காட்டை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சிஜூ ஜோசப். இவரது மகன் சைனஸ் சிஜூ (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் சென்றார்.

    அப்போது காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் எதிரே சென்ற லோடு ஆட்டோ மீது மோதியது.

    இதில் சைனஸ் சிஜூ தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சைனஸ் சிஜூ பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள.
    Next Story
    ×