search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
    X

    ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

    ஓடும் ரெயிலில் பெண்ணின் பையில் வைத்திருந்த 3½ பவுன் நகை, ரூ.3 ஆயிரம், ரேஷன் அட்டை உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த இடையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் ஜோலார்பேட்டையில் ரெயில்வே தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 25). இவர் நேற்று முன்தினம் தனது குழந்தைகளுடன் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

    அந்த ரெயில் சென்னை வந்ததும், மகாலட்சுமி தனது பணப்பையை பார்த்த போது மாயமாகி இருந்தது. அதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. அந்த பையில் 3½ பவுன் நகை, ரூ.3 ஆயிரம், ரேஷன் அட்டை உள்ளிட்ட 15 ஆவணங்களை மகாலட்சுமி வைத்திருந்தார்.

    இதுகுறித்து மகாலட்சுமி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×