search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே ஒடும் ரெயிலில் கேரள வாலிபரை தாக்கிய கும்பல்
    X

    திண்டுக்கல் அருகே ஒடும் ரெயிலில் கேரள வாலிபரை தாக்கிய கும்பல்

    திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் கேரள வாலிபரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ராஜீவ் மகன் கவுதம் (வயது22). இவர் பாண்டிச்சேரியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக கேரளாவில் கன மழை பெய்ததால் தனது குடும்பத்தினர் நிலை குறித்து அறியாமல் மிகவும் கவலையுடன் இருந்தார்.

    தற்போது மழை நின்று போக்குவரத்து சீரானதை தொடர்ந்து சென்னையில் இருந்து ரெயிலில் கேரளாவிற்கு வந்து கொண்டிருந்தார்.

    ரெயிலில் அவருடன் பயணித்த ஒரு தரப்பினருக்கும், கவுதமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கும்பல் கவுதமை கடுமையாக தாக்கி உள்ளனர். திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தபோது கவுதம் தனது உடமைகளுடன் கீழே இறங்கினார். பின்னர் அங்கேயே மயக்கம் அடைந்து விழுந்தார். ரத்த காயத்துடன் கிடந்த அவரை ரெயில்வே ஊழியர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை தாக்கிய கும்பல் யார்? வழிப்பறி சம்பவத்தில் தாக்கினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×