search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
    X

    சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே தாசரிபாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் கடந்த 6 மாதமாக சீரான குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தாசரி பாளையம் பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் சத்தி- அத்தாணி ரோட்டுக்கு வந்தனர்.

    அவர்கள் சத்தி-அத்தாணி ரோட்டில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×