என் மலர்
செய்திகள்

சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே தாசரிபாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் கடந்த 6 மாதமாக சீரான குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தாசரி பாளையம் பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் சத்தி- அத்தாணி ரோட்டுக்கு வந்தனர்.
அவர்கள் சத்தி-அத்தாணி ரோட்டில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் அருகே தாசரிபாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் கடந்த 6 மாதமாக சீரான குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தாசரி பாளையம் பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் சத்தி- அத்தாணி ரோட்டுக்கு வந்தனர்.
அவர்கள் சத்தி-அத்தாணி ரோட்டில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






