search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளும் ஊழல் பேர்வழிகள் - நடிகை ஸ்ரீபிரியா பேட்டி
    X

    தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளும் ஊழல் பேர்வழிகள் - நடிகை ஸ்ரீபிரியா பேட்டி

    தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளும் ஊழல் பேர்வழிகள் என்று நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் மக்கள் நீதிமய்யம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான ஸ்ரீபிரியா, பாடலாசிரியர் சினேகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு நடிகை ஸ்ரீபிரியா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசியலுக்கு யார் வேண்டுமானலும் வரலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. மக்கள் யாரை நம்புகின்றனர் என்பதுதான் முக்கியம்.

    தமிழகம் இனியாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக திராவிட கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தந்தனர். தற்போது திராவிட கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

    தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சி அமைய வேண்டும். எனவே வாக்குகளை தயவு செய்து விற்க வேண்டாம். தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளும் ஊழல் பேர்வழிகள்தான். கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கைக்கும், வெற்றிக்கும் தொடர்பு இல்லை. அதிக உறுப்பினர்களை வைத்துள்ள கட்சிகூட பல சமயங்களில் டெபாசிட் இழந்து வருகிறது.

    ரஜினி இன்னும் அரசியலுக்கே வரவில்லை. அவர் வந்தபிறகுதான் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும். அவர் எனக்கு நல்ல நண்பர். இருந்தபோதும் நட்பு வேறு, கொள்கை வேறு.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×