என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே குழந்தையை தவிக்க விட்டு மாயமான போலீஸ்காரர் மனைவி
கன்னிவாடி:
திண்டுக்கல் அருகே கன்னிவாடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்ராஜா (வயது 24). கோவை 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி ஏஞ்சல் புளோரி (24) இவர்களுக்கு மேனிஷா (4) என்ற என்ற பெண் குழந்தை உள்ளது.
கோவையில் வேலை பார்த்து வந்த வேல்ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது ஏஞ்சல் புளோரியின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதை அவர் மறைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வேல்ராஜா ஏஞ்சல் புளோரியின் செல்போனை சோதனை செய்துள்ளார். அதில் அவர் பல ஆண்களுடன் பேசியது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த வேல்ராஜா தனது மனைவியை கண்டித்துள்ளார்.
கோபத்தில் வேல்ராஜா வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். வீடு திரும்பிய போது அங்கு ஏஞ்சல் புளோரி குழந்தையை தவிக்க விட்டு விட்டு மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கன்னிவாடி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்