search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நள்ளிரவு வரை காத்திருந்தும் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    நள்ளிரவு வரை காத்திருந்தும் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

    திண்டுக்கல்லில் நள்ளிரவு வரை காத்திருந்தும் குடிநீர் வராததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் 41-வது வார்டுக்குட்பட்ட பூச்சிநாயக்கன்பட்டி, முத்தாலம்மன் கோவில் தெரு, ஜின்னாநகர், மறைஞானநகர், யூசூப்பியா நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 25 நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் இருந்து வந்தனர்.

    மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர். மாநகராட்சி ஊழியர் நேற்று அப்பகுதிக்கு வந்து இன்று இரவு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறிச் சென்றார்.

    அதனை நம்பி இரவு 1 மணி வரை அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கண் விழித்து காத்திருந்தனர். ஆனால் தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்து திண்டுக்கல் - மதுரை சாலையில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகர் தெற்கு போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்தனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து இன்று மாலைக்குள் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. #tamilnews
    Next Story
    ×