என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்னவாசல் வட்டாரத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
Byமாலை மலர்8 Aug 2018 6:14 PM GMT (Updated: 8 Aug 2018 6:14 PM GMT)
அன்னவாசல் வட்டாரத்தில் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அன்னவாசல்:
அன்னவாசல் வட்டாரத்தில் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆயிங்குடி கிராமத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை, ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மழைநீர் செறிவூட்டும் அமைப்பு, சித்தன்னவாசலில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பண்ணை குட்டை, ரூ.28 ஆயிரம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள மழைத்தூவுவான் கருவி, புதூரில் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 2 பண்ணை குட்டைகள் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கண்மாய்களில் மழைநீர் தொடர்ந்து தடையின்றி வரும் வகையில் மழைநீர் வரத்துவாரிகளை பராமரிக்கவும், வேளாண் கருவிகளை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்கவும், தடுப்பணைகளில் மழைநீர் தேங்கும் வகையில் வரத்துவாரிகளில் உள்ள தடுப்புகளை நீக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதிதங்கம், வேளாண்மை துணை இயக்குனர் சிங்காரம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
அன்னவாசல் வட்டாரத்தில் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆயிங்குடி கிராமத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை, ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மழைநீர் செறிவூட்டும் அமைப்பு, சித்தன்னவாசலில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பண்ணை குட்டை, ரூ.28 ஆயிரம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள மழைத்தூவுவான் கருவி, புதூரில் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 2 பண்ணை குட்டைகள் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கண்மாய்களில் மழைநீர் தொடர்ந்து தடையின்றி வரும் வகையில் மழைநீர் வரத்துவாரிகளை பராமரிக்கவும், வேளாண் கருவிகளை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்கவும், தடுப்பணைகளில் மழைநீர் தேங்கும் வகையில் வரத்துவாரிகளில் உள்ள தடுப்புகளை நீக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதிதங்கம், வேளாண்மை துணை இயக்குனர் சிங்காரம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X