என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் - விருதுநகர் மாவட்டத்துக்கு 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை
Byமாலை மலர்7 Aug 2018 8:20 AM GMT (Updated: 7 Aug 2018 8:20 AM GMT)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்துக்கு வருகிற 13-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்துக்கு வருகிற 13-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது.
தேரோட்ட விழாவில் விருதுநகர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வசதியாக வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடுபட்டும் வகையில் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. 13-ந்தேதி அன்று மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்பு நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X