search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலமேடு வாடிவாசல் அருகில் ரூ.15 லட்சம் மதிப்பில் பார்வையாளர் மாடம் கட்டும் பணி
    X

    பாலமேடு வாடிவாசல் அருகில் ரூ.15 லட்சம் மதிப்பில் பார்வையாளர் மாடம் கட்டும் பணி

    பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பார்வையாளர் மாடம் அமைப்பதற்கான பூமி பூஜையை மாணிக்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
    அலங்காநல்லூர்:

    பாலமேடு மஞ்சமலை ஆற்றில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் திடல் உள்ளது. இதன் அருகில் பார்வையாளர் மாடம் உள்ளது.

    இடப்பற்றாக்குறை காரணமாக பார்வையாளர்கள் அமர்வதற்கு சிரமம் இருந்து வந்தது. பாலமேடு கிராம மக்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் புதிய பார்வையாளர் மாடம் அமைக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கும், எம்.எல்.ஏ.விற்கும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இதன் காரணமாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி அங்குள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் புதிய பார்வையாளர் மாடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடிமுருகு, மற்றும் கிராம பொது மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள், பேரூராட்சி பணியாளர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×