என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தனியார் பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதி
ஊத்தங்கரை:
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி இன்று தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தனியார் பஸ் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இதனால் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து தருமபுரி, திருவண்ணாமலை, அரூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பெரும்பாலான தனியார் பஸ்கள் இயங்கவில்லை.
இதன் காரணமாக இன்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.
தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் காரணமாக பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை. இன்று காலை போச்சம்பள்ளி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
தருமபுரியில் இன்று வழக்கம்போல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. 50 சதவீத ஆட்டோக்கள் இயங்கின. அந்த ஆட்டோக்களையும் ஓட்டாமல் நிறுத்தி வைக்குமாறு தொழிற்சங்க நிர்வாகிகள் ஆட்டோ டிரைவர்களை கேட்டுக் கொண்டனர். அவர்களிடம் நோட்டீசும் வழங்கினர்.
தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 28 தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் இன்று மூடப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு வழக்கம் போல தமிழக மற்றும் கர்நாடக அரசு பஸ்கள் இயங்கின.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இன்று வழக்கம் போல அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கின. லாரிகள் மற்றும் ஆட்டோக்களும் ஓடின.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்