என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் முதியவர் பிணம்
Byமாலை மலர்4 Aug 2018 2:47 PM GMT (Updated: 4 Aug 2018 2:47 PM GMT)
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இன்று முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மார்த்தாண்டம்:
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒரு கடை முன்பு முதியவர் ஒருவர் படுத்து கிடந்தார். அவர் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் கடையின் உரிமையாளர் அவர் அருகில் சென்று எழுப்பினார். ஆனால் அந்த நபர் அசைவற்று கிடந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது பற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அந்த நபர் இறந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரித்தனர். இதில் இறந்து கிடந்த முதியவர் அருகே ஒரு பை இருந்தது. அதில் இருந்த துண்டு சீட்டில் கணபதி ஆசாரி, காப்புக்காடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X