search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரோம்பேட்டையில் பஸ் மோதி வாலிபர் பலி
    X

    குரோம்பேட்டையில் பஸ் மோதி வாலிபர் பலி

    குரோம்பேட்டையில் பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    தாம்பரம்:

    அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (29). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தார். நேற்று மாலை தனது நண்பரை பார்க்க குரோம்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பஸ் டிரைவர் சுந்தரராஜன் (68) கைது செய்யப்பட்டார். அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.

    Next Story
    ×