என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்
Byமாலை மலர்31 July 2018 8:31 AM GMT (Updated: 31 July 2018 8:31 AM GMT)
திருப்பூரில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
திருப்பூர்:
திருப்பூர் கல்லாங்காடு திருக்குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுசில். இவருடைய மனைவி கோகிலா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோகிலாவின் உறவினர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் அருணா உடன் இருந்தார். ஆம்புலன்ஸ் கருப்பன கவுண்டம்பாளையம் அருகே வந்தபோது கோகிலாவுக்கு பிரசவ வலி அதிகமானது. உடனே டிரைவர் வாகனத்தை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினார்.
மருத்துவ உதவியாளர் கோகிலாவுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். இதில் கோகிலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும் குழந்தையையும் அதே ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவரும் நலமாக உள்ளனர். ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு சுகபிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளரை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
திருப்பூர் கல்லாங்காடு திருக்குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுசில். இவருடைய மனைவி கோகிலா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோகிலாவின் உறவினர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் அருணா உடன் இருந்தார். ஆம்புலன்ஸ் கருப்பன கவுண்டம்பாளையம் அருகே வந்தபோது கோகிலாவுக்கு பிரசவ வலி அதிகமானது. உடனே டிரைவர் வாகனத்தை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினார்.
மருத்துவ உதவியாளர் கோகிலாவுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். இதில் கோகிலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும் குழந்தையையும் அதே ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவரும் நலமாக உள்ளனர். ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு சுகபிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளரை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X