search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டின் மேற்கூரையில் ஏறி வேலை பார்த்த தொழிலாளி தவறி விழுந்து பலி
    X

    வீட்டின் மேற்கூரையில் ஏறி வேலை பார்த்த தொழிலாளி தவறி விழுந்து பலி

    காங்கயத்தில் வீட்டின் மேற்கூரையில் ஏறி வேலை பார்த்த தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் சேசுமாணிக்கம் (வயது 40). இவரது நண்பர் ஜெயசீலன் (46). இருவரும் தொழிலாளர்கள். இவர்கள் காங்கயத்தில் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். வீட்டின் மேற்கூரையில் ஏறி பிரித்து கொண்டிருந்தனர். அப்போது மேற்கூரை சிமெண்டு கூரை திடீரென சரிந்தது. இதில் தொழிலாளர்கள் இருவரும் மேலே இருந்து தவறி கீழே விழுந்தனர். படுகாயத்துடன் துடித்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயசீலன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் படுகாயத்துடன் சேர்க்கப்பட்ட அவரது நண்பர் சேசு மாணிக்கத்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிதாப சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் காங்கயம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×