என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நண்பர்களுடன் குளித்த போது தடுப்பணையில் மூழ்கி வங்கி ஊழியர் மரணம்
Byமாலை மலர்30 July 2018 10:01 AM GMT (Updated: 30 July 2018 10:01 AM GMT)
நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரை சாவடி தடுப்பணை பகுதியில் நண்பர்களுடன் குளித்த போது தடுப்பணையில் மூழ்கி வங்கி ஊழியர் மரணம் அடைந்தார்.
வடவள்ளி:
கோவை மருதமலை அடிவாரம் பகுதியில் தேங்காய் கடை நடத்தி வருபவர் ரவி.
இவரது மகன் திவாகர் (20) கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாளான நேற்று திவாகர் நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரை சாவடி தடுப்பணை பகுதிக்கு நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்றார்.
அப்போது அணையின் மேற்கு பகுதியில் அனைவரும் குளித்துள்ளனர். அப்போது திவாகர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் சுழலில் சிக்கி திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். உடனே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அரை நேரத்திற்கு மேலாக போராடி, தடுப்பணையில் சேற்றில் சிக்கியிருந்த திவாகரை பிணமாக மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மருதமலை அடிவாரம் பகுதியில் தேங்காய் கடை நடத்தி வருபவர் ரவி.
இவரது மகன் திவாகர் (20) கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாளான நேற்று திவாகர் நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரை சாவடி தடுப்பணை பகுதிக்கு நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்றார்.
அப்போது அணையின் மேற்கு பகுதியில் அனைவரும் குளித்துள்ளனர். அப்போது திவாகர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் சுழலில் சிக்கி திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். உடனே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அரை நேரத்திற்கு மேலாக போராடி, தடுப்பணையில் சேற்றில் சிக்கியிருந்த திவாகரை பிணமாக மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X