search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நண்பர்களுடன் குளித்த போது தடுப்பணையில் மூழ்கி வங்கி ஊழியர் மரணம்
    X

    நண்பர்களுடன் குளித்த போது தடுப்பணையில் மூழ்கி வங்கி ஊழியர் மரணம்

    நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரை சாவடி தடுப்பணை பகுதியில் நண்பர்களுடன் குளித்த போது தடுப்பணையில் மூழ்கி வங்கி ஊழியர் மரணம் அடைந்தார்.
    வடவள்ளி:

    கோவை மருதமலை அடிவாரம் பகுதியில் தேங்காய் கடை நடத்தி வருபவர் ரவி.

    இவரது மகன் திவாகர் (20) கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாளான நேற்று திவாகர் நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரை சாவடி தடுப்பணை பகுதிக்கு நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்றார்.

    அப்போது அணையின் மேற்கு பகுதியில் அனைவரும் குளித்துள்ளனர். அப்போது திவாகர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் சுழலில் சிக்கி திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். உடனே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அரை நேரத்திற்கு மேலாக போராடி, தடுப்பணையில் சேற்றில் சிக்கியிருந்த திவாகரை பிணமாக மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×