search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் கண்காணிப்பில் எஸ்.ஏ. ராஜா மகனுக்கு தொடர்ந்து சிகிச்சை
    X

    போலீஸ் கண்காணிப்பில் எஸ்.ஏ. ராஜா மகனுக்கு தொடர்ந்து சிகிச்சை

    ஆரல்வாய்மொழி அருகே போலீஸ் கண்காணிப்பில் எஸ்.ஏ. ராஜா மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த மறைந்த எஸ்.ஏ. ராஜாவின் மகன் ஜான்சல் ராஜா (வயது 55). இவர், நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருகிறார். ஜான்சல் ராஜா ஆரல்வாய்மொழி அருகே உள்ள கல்லூரியின் நிர்வாகியாக உள்ளார். இவரை ஒடிசா மாநில போலீசார் வழக்கு ஒன்றில் கைது செய்து நாகர்கோவில் ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    ஜான்சல் ராஜாவை வருகிற 30-ந்தேதி ஒடிசா கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஜான்சல் ராஜா திடீரென கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பரிவில் சேர்க்கப்பட்டுள்ள ஜான்சல் ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஒடிசா மாநில போலீசாரும் குமரி மாவட்ட போலீசாரும் ஜான்சல் ராஜா சிகிச்சை பெறும் வார்டின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் கண்காணிப்பில் அவருக்கு இன்று 3-வது நாளாக சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு அவரை ஒடிசா மாநில போலீசார் அங்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே ஜான்சல் ராஜாவின் வக்கீல்கள் மதுரை ஐகோர்ட்டில் அவருக்கு ஜாமீன் கேட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
    Next Story
    ×