என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி அருகே மின் கம்பத்தில் கார் மோதி தொழிலாளி மரணம்
Byமாலை மலர்28 July 2018 7:37 AM GMT (Updated: 28 July 2018 7:37 AM GMT)
பொள்ளாச்சி அருகே மின் கம்பத்தில் கார் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பந்தலூரை சேர்ந்தவர்கள் ஆனந்தன்(வயது 26), அர்ஜூனன் (24), அருண்(29), பன்னீர்செல்வம்(22). இவர்கள் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட்டில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
4 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு சென்றனர். மீண்டும் நேற்று இரவு ஒரு காரில் வால்பாறைக்கு புறப்பட்டனர். காரை அர்ஜூனன் ஓட்டி வந்தார். கார் ஆழியாறு அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய டிரைவர் அர்ஜூனன், அருண், பன்னீர்செல்வம் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஆழியாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பந்தலூரை சேர்ந்தவர்கள் ஆனந்தன்(வயது 26), அர்ஜூனன் (24), அருண்(29), பன்னீர்செல்வம்(22). இவர்கள் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட்டில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
4 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு சென்றனர். மீண்டும் நேற்று இரவு ஒரு காரில் வால்பாறைக்கு புறப்பட்டனர். காரை அர்ஜூனன் ஓட்டி வந்தார். கார் ஆழியாறு அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய டிரைவர் அர்ஜூனன், அருண், பன்னீர்செல்வம் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஆழியாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X