என் மலர்
செய்திகள்

ஆசனூர் அருகே வனக்காப்பாளரை தாக்கியவர் கைது
தாளவாடி:
தலமலை வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணி புரிபவர் சுதாகர் (வயது 36). இவர் நேற்று பெஜலட்டி கிராமத்துக்கு தலமலை வழியாக செல்லும் அரசு பஸ்சில் சென்றார்.
திம்பம் பஸ் நிறுத்தத்தில் பெஜலட்டி கிராமத்தை சேர்ந்த முத்தன் (38) என்பவர் பஸ்சில் ஏறினார். அவர் சுதாகரை ஜாடையாக பேசிக் கொண்டு வந்தாராம்.
பெஜலட்டி கிராமத்தில் சுதாகர் இறங்கி சென்றபோது அவரை தகாத வார்த்தைகளால் பேசிய முத்தன் கைகளால் தாக்கி பீர் பாட்டிலால் குத்த முயன்றார். உடனிருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் அவ்வழியே வந்த மாவோயிஸ்ட் தடுப்பு காவலர்கள் தடுத்தனர்.
இது தொடர்பாக வனக்காப்பாளர் சுதாகர் ஆசனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து முத்தனை கைது செய்தார்.
பின்னர் சத்தியமங்கலம் கோர்ட்டில் முத்தனை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






