search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பக்கூடல் அருகே விபத்து - டிரைவர் பலி
    X

    ஆப்பக்கூடல் அருகே விபத்து - டிரைவர் பலி

    ஆப்பக்கூடல் அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 34).

    இவர் நேற்று இரவு 9 மணி அளவில் சரக்கு ஆடடோவில் ஆப்பக்கூடல் அருகே கரட்டூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென ஆட்டோ அவரது பிடியில் இருந்து நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

    இதில் குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே ஆட்டோ இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் இரவில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான குருமூர்த்தி உடல் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை வருகிறார்கள்.

    விபத்தில் பலியான குருமூர்த்திக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். #accidentcase

    Next Story
    ×