என் மலர்
செய்திகள்

இன்று சந்திர கிரகணம் - இரவு 8.30 மணிக்கு பூஜை செய்து கோவில்கள் அடைப்பு
சந்திர கிரகணத்தை யொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களும் முன் கூட்டியே நடைகள் சாத்தப்படுகிறது. #LunarEclipse
ஈரோடு:
இன்று இரவு சந்திர கிரகணம் நடக்க உள்ளது. இந்த சந்திர கிரகணம் நீண்ட நேரமாக நீடிக்கும் என்பதால் வரலாற்று சிறப்பு வாய்ந்த கிரகணமாக பார்க்க முடிகிறது.
மேலும் இந்த கிரகணத்தை அனைவரும் தெளிவாக பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சந்திர கிரகணத்தை யொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களும் முன் கூட்டியே நடைகள் சாத்தப்படுகிறது.
பண்ணாரியம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை பெருமாள் மற்றும் ஈஸ்வரன் கோவில், திண்டல் வேலாயுதசாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று இரவு 8.30 மணிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்ட கோவில்கள் பூட்டப்படுகிறது.
மறுநாள் காலை 6 மணிக்கு கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு புண்யாகம் செய்து மீண்டும் பூஜைகள் நடைபெறும். #LunarEclipse
இன்று இரவு சந்திர கிரகணம் நடக்க உள்ளது. இந்த சந்திர கிரகணம் நீண்ட நேரமாக நீடிக்கும் என்பதால் வரலாற்று சிறப்பு வாய்ந்த கிரகணமாக பார்க்க முடிகிறது.
மேலும் இந்த கிரகணத்தை அனைவரும் தெளிவாக பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சந்திர கிரகணத்தை யொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களும் முன் கூட்டியே நடைகள் சாத்தப்படுகிறது.
பண்ணாரியம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை பெருமாள் மற்றும் ஈஸ்வரன் கோவில், திண்டல் வேலாயுதசாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று இரவு 8.30 மணிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்ட கோவில்கள் பூட்டப்படுகிறது.
மறுநாள் காலை 6 மணிக்கு கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு புண்யாகம் செய்து மீண்டும் பூஜைகள் நடைபெறும். #LunarEclipse
Next Story






