என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிண்டி வங்கியில் ரூ.10 கோடி கடன் மோசடி- 2 அதிகாரிகள் மீது வழக்கு
Byமாலை மலர்27 July 2018 6:17 AM GMT (Updated: 27 July 2018 6:17 AM GMT)
கிண்டியில் உள்ள வங்கியில் கடன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யாமல் ரூ.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக 2 அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:
கிண்டியில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில், திருவள்ளூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ.20 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தது.
இது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் கடன் தொகைக்கு தேவையான ஆவணங்களையும் தாக்கல் செய்தது. நிறுவனத்தின் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக கடன் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆவணங்களை வங்கி அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்யாமல் கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி வங்கியின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் 2 வங்கி அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வங்கியின் துணை பொதுமேலாளர் சி.பி.ஐ.யில் புகார் அளித்தார்.
இதனையடுத்து வங்கியின் பொது மேலாளர் ஜெயந்தி, மற்றும் இன்னொரு அதிகாரியான நாகராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வங்கி கடன் மோசடி தொடர்பாக மேலும் 5 பேரும் சிக்கினர். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.
முறைகேடாக கடன் வழங்கியதன் மூலம் ரூ.10 கோடி வரையில் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Tamilnews
கிண்டியில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில், திருவள்ளூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ.20 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தது.
இது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் கடன் தொகைக்கு தேவையான ஆவணங்களையும் தாக்கல் செய்தது. நிறுவனத்தின் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக கடன் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆவணங்களை வங்கி அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்யாமல் கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி வங்கியின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் 2 வங்கி அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வங்கியின் துணை பொதுமேலாளர் சி.பி.ஐ.யில் புகார் அளித்தார்.
இதனையடுத்து வங்கியின் பொது மேலாளர் ஜெயந்தி, மற்றும் இன்னொரு அதிகாரியான நாகராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வங்கி கடன் மோசடி தொடர்பாக மேலும் 5 பேரும் சிக்கினர். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.
முறைகேடாக கடன் வழங்கியதன் மூலம் ரூ.10 கோடி வரையில் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X