என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரணாம்பட்டு வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளை சுட்டு வேட்டையாடிய 3 பேர் கைது
    X

    பேரணாம்பட்டு வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளை சுட்டு வேட்டையாடிய 3 பேர் கைது

    பேரணாம்பட்டு வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளை சுட்டு வேட்டையாடி 3 பேர் கைது செய்யப்பட்டனர். #arrestcase

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள மோர்தானா விரிவு காப்புக்காடு எருக்கம்பட்டு வனப்பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதுப்பற்றி தகவலறிந்த பேரணாம்பட்டு வனச்சரகர் மூர்த்தி, வனவர் ரகுபதி, வனக்காப்பாளர் திருநாவுக்கரசு, ஞானவேல், செல்வம் ஆகியோர் அடங்கிய குழுவினர் எருக்கம்பட்டு வனப்பகுதிக்குள் ரோந்து சென்றனர்.

    அப்போது, 3 பேர் கும்பல் காட்டுப்பன்றிகளை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொன்று வேட்டையாடியதை பார்த்தனர். 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், எருக்கம்பட்டை சேர்ந்த பாபு (வயது 42), ராஜீவ்காந்தி (40), ராஜிகுட்டி (55) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்களிடம் இருந்து, உரிமம் இல்லாத ஒரு நாட்டு துப்பாக்கி, கந்தக வெடி மருந்து, பேட்டரி, கத்தி மற்றும் வேட்டையாடப்பட்ட 50 கிலோ பன்றியை பறிமுதல் செய்தனர். #arrestcase

    Next Story
    ×