search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மாநகரில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்- போலீஸ் துணை கமி‌ஷனர் தகவல்
    X

    திருச்சி மாநகரில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்- போலீஸ் துணை கமி‌ஷனர் தகவல்

    திருச்சி மாநகராட்சி பகுதியில் குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் நடவடிக்கையில் மாநகர காவல் துறை ஈடுபட்டு வருகிறது.
    மலைக்கோட்டை:

    திருச்சி மாநகராட்சி பகுதியில் குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் நடவடிக்கையில் மாநகர காவல் துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் வியாபாரிகளின் பங்களிப்புடன் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக காவல் துறை -வியாபாரிகள் இடையேயான ஆலோசனை கூட்டம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோட்டை, காந்தி மார்க்கெட், தில்லைநகர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது துணை கமி‌ஷனர் மயில்வாகனன் கூறியதாவது:-

    பொதுமக்கள் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். வியாபாரிகள் தங்கள் கடை முன்பு ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. அப்படியே கடைமுன்பு வேறு யாராவது ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் போலீசில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்சி மாநகரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ஏற்கனவே உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் தவிர, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் வியாபாரிகள் மற்றும் காவல்துறை சார்பில் பொருத்தப்பட உள்ளது.

    எனவே வியாபாரிகள்- பொதுமக்கள் சமூக அக்கறையுடன் போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான என்.எஸ்.பி. ரோடு, சத்திரம் பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    கூட்டத்தில்உதவி கமி‌ஷனர்கள் பெரியண்ணன், ராமச்சந்திரன், விக்னேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஞானசேகர் மற்றும் வணிக நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்டவைகளில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×