search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy corporation"

    • வரி செலுத்தவும், குறைகள் குறித்த புகார்களை தெரிவிக்கவும் விரைவில் திருச்சி மாநகராட்சி சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது
    • இந்த செயலியில் மாநகராட்சி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் விவரங்கள் இடம் பெறும்

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஆன்லைன் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இருக்கும் மொபைல் அப்ளிகேஷனை மாற்றிவிட்டு புதிதாக அறிமுகம் செய்ய உள்ளனர்.

    இந்த செயலியில் மாநகராட்சி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் விவரங்கள் இடம் பெறும். இதில் மாநகர வாசிகள் முன்பதிவு செய்து தேவைகளை நிவர்த்தி செய்யலாம். அது மட்டும் அல்லாமல் புகார்கள் அளிக்கும் வசதி, வரி செலுத்துதல் போன்ற அம்சங்களும் இடம்பெறுகிறது.

    மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான ஒரு இடத்தையும் ஒதுக்கியுள்ளனர். இந்த புதிய செயலிக்கு திருச்சி சிட்டிசன் ஆப் என பெயரிடப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குள் புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உபயோகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவாது என்று சொல்லப்பட்டாலும் பெரும்பாலான மக்களிடம் ஸ்மார்ட் போன் வசதி இருப்பதால் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு செயலி மூலம் உதவ முடியும் என்கிறார்கள்.

    இந்தியாவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகராட்சி 4-வது இடத்தை பிடித்துள்ளது.
    திருச்சி:

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் தூய்மை நகரங்களை பட்டியலிட்டு அறிவித்து வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 4,237 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து ஆய்வு செய்யப்படுகிறது. அதற்காக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் கருத்தும் கேட்கப்படுகிறது. 1 கோடியே 40 லட்சம் மக்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. மொத்தம் 5 ஆயிரம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அவற்றில் அதிகபட்ச மதிப்பெண் பெறும் நகரங்களை வரிசைப்படுத்தி தூய்மை நகரங்கள் என பட்டியலிடப்படுகிறது.

    திருச்சி மாநகராட்சி கடந்த 2015-ம் ஆண்டு 14.25 புள்ளிகள் பெற்று இந்தியாவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் 2-வது இடத்தை பெற்றது. 2016-ம் ஆண்டில் 3-வது இடமும், 2017-ம் ஆண்டு 7-வது இடமும் பெற்றது. கடந்த ஆண்டு பட்டியலில் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டு 13-வது இடத்தை பெற்றது. இருப்பினும் தமிழ்நாட்டில் முதலிடம் என்று ஆறுதல் அடைய செய்தது.

    இந்த ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் பட்டியலில் இடம் பிடிக்க, ஆன்-லைன் மூலம் மக்கள் கருத்து கேட்டு மதிப்பெண் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது. அதற்காக திருச்சி மாநகராட்சி சார்பில் புதிய செயலி (ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டது. அது மட்டுமல்லாது முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து தளங்களையும் பயன்படுத்த ஊக்குவிப்பு பணிகளில் ஈடுபட்டது. அதன் பயனாக திருச்சி மாநகராட்சி தூய்மை நகரங்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

    புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்தியாவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் ஐதராபாத் முதலிடத்தையும், நொய்டா 2-வது இடத்தையும், தெற்கு டெல்லி 3-வது இடத்தையும், திருச்சி மாநகராட்சி 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர்வரை, ஆன்-லைன் மூலம் திருச்சி மாநகராட்சி நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.


    திருச்சி மாநகராட்சி பகுதியில் குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் நடவடிக்கையில் மாநகர காவல் துறை ஈடுபட்டு வருகிறது.
    மலைக்கோட்டை:

    திருச்சி மாநகராட்சி பகுதியில் குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் நடவடிக்கையில் மாநகர காவல் துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் வியாபாரிகளின் பங்களிப்புடன் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக காவல் துறை -வியாபாரிகள் இடையேயான ஆலோசனை கூட்டம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோட்டை, காந்தி மார்க்கெட், தில்லைநகர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது துணை கமி‌ஷனர் மயில்வாகனன் கூறியதாவது:-

    பொதுமக்கள் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். வியாபாரிகள் தங்கள் கடை முன்பு ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. அப்படியே கடைமுன்பு வேறு யாராவது ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் போலீசில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்சி மாநகரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ஏற்கனவே உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் தவிர, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் வியாபாரிகள் மற்றும் காவல்துறை சார்பில் பொருத்தப்பட உள்ளது.

    எனவே வியாபாரிகள்- பொதுமக்கள் சமூக அக்கறையுடன் போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான என்.எஸ்.பி. ரோடு, சத்திரம் பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    கூட்டத்தில்உதவி கமி‌ஷனர்கள் பெரியண்ணன், ராமச்சந்திரன், விக்னேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஞானசேகர் மற்றும் வணிக நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்டவைகளில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    ×