search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாயல்குடி அருகே கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
    X

    சாயல்குடி அருகே கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

    சாயல்குடி அருகே குருவாடி கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாயல்குடி:

    குருவாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குருவாடி, கொக்காடி, அவத்தாண்டை, எஸ்.எம்.இலந்தைகுளம் கிராமங்களிலிருந்து மாணவ படித்து வருகின்றனர்.

    1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பழைய ஓட்டுக் கட்டிடத்திலேயே பள்ளி இயங்கி வருகிறது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 300 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்

    இப்பள்ளியில் இட நெருக்கடி இருப்பதால் வெளியே மரத்தின் நிழலில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இடவசதி இல்லாத காரணத்தால் பொது மக்கள் கோரிக்கையின் பேரில் ஆறு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக குருவாடியிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் நபார்டு வங்கியின் மூலம் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    பணி நிறைவடைந்து 6 மாதங்கள் ஆன நிலையிலும் மாணவ-மாணவிகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படாமல் பழைய கட்டிடத்திலேயே இந்த பள்ளி இயங்கி வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் சுற்று வட்டார கிராம பகுதியிலிருந்து பள்ளிக்கு மாணவ -மாணவிகளை அனுப்புகிறோம்.

    கடந்த ஆண்டுகளில் பள்ளியின் ஓடுகள் கீழே விழுந்து மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். பழைய கட்டிடம் என்பதால் இடிந்து விழும் நிலையில் மாணவ மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.

    இடநெருக்கடி காரணமாக 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாத காலம் ஆகிவிட்டது.

    புதிய கட்டிடத்திற்கு பள்ளியை மாற்றாமல் பழைய கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மாணவ- மாணவிகளின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.
    Next Story
    ×