என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாயல்குடி அருகே கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
Byமாலை மலர்17 July 2018 1:50 PM GMT (Updated: 17 July 2018 1:50 PM GMT)
சாயல்குடி அருகே குருவாடி கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாயல்குடி:
குருவாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குருவாடி, கொக்காடி, அவத்தாண்டை, எஸ்.எம்.இலந்தைகுளம் கிராமங்களிலிருந்து மாணவ படித்து வருகின்றனர்.
1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பழைய ஓட்டுக் கட்டிடத்திலேயே பள்ளி இயங்கி வருகிறது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 300 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்
இப்பள்ளியில் இட நெருக்கடி இருப்பதால் வெளியே மரத்தின் நிழலில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இடவசதி இல்லாத காரணத்தால் பொது மக்கள் கோரிக்கையின் பேரில் ஆறு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக குருவாடியிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் நபார்டு வங்கியின் மூலம் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
பணி நிறைவடைந்து 6 மாதங்கள் ஆன நிலையிலும் மாணவ-மாணவிகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படாமல் பழைய கட்டிடத்திலேயே இந்த பள்ளி இயங்கி வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் சுற்று வட்டார கிராம பகுதியிலிருந்து பள்ளிக்கு மாணவ -மாணவிகளை அனுப்புகிறோம்.
கடந்த ஆண்டுகளில் பள்ளியின் ஓடுகள் கீழே விழுந்து மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். பழைய கட்டிடம் என்பதால் இடிந்து விழும் நிலையில் மாணவ மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.
இடநெருக்கடி காரணமாக 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாத காலம் ஆகிவிட்டது.
புதிய கட்டிடத்திற்கு பள்ளியை மாற்றாமல் பழைய கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மாணவ- மாணவிகளின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.
குருவாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குருவாடி, கொக்காடி, அவத்தாண்டை, எஸ்.எம்.இலந்தைகுளம் கிராமங்களிலிருந்து மாணவ படித்து வருகின்றனர்.
1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பழைய ஓட்டுக் கட்டிடத்திலேயே பள்ளி இயங்கி வருகிறது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 300 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்
இப்பள்ளியில் இட நெருக்கடி இருப்பதால் வெளியே மரத்தின் நிழலில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இடவசதி இல்லாத காரணத்தால் பொது மக்கள் கோரிக்கையின் பேரில் ஆறு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக குருவாடியிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் நபார்டு வங்கியின் மூலம் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
பணி நிறைவடைந்து 6 மாதங்கள் ஆன நிலையிலும் மாணவ-மாணவிகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படாமல் பழைய கட்டிடத்திலேயே இந்த பள்ளி இயங்கி வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் சுற்று வட்டார கிராம பகுதியிலிருந்து பள்ளிக்கு மாணவ -மாணவிகளை அனுப்புகிறோம்.
கடந்த ஆண்டுகளில் பள்ளியின் ஓடுகள் கீழே விழுந்து மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். பழைய கட்டிடம் என்பதால் இடிந்து விழும் நிலையில் மாணவ மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.
இடநெருக்கடி காரணமாக 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாத காலம் ஆகிவிட்டது.
புதிய கட்டிடத்திற்கு பள்ளியை மாற்றாமல் பழைய கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மாணவ- மாணவிகளின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X