search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அதிமுக எம்.பி.க்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவுறுத்தல்
    X

    மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அதிமுக எம்.பி.க்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவுறுத்தல்

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்க்குமாறு அதிமுக எம்.பி.க்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர். #MansoonSession #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்களோடு பல்கலைக்கழக மானியக்குழுவை கலத்து புதிய அமைப்பை ஏற்படுத்தும் யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட புதிய மசோதாக்களை நிறைவேற்ர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து அதிமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், எம்.பி.க்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    மேலும், யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதா ஆகியவற்றை எதிர்க்குமாறு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த இரண்டு மசோதாக்களை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×