என் மலர்
செய்திகள்

வேலூரில் பட்டாசு குடோன் வெடி விபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்தினர் நிவாரணம் வழங்க கோரிக்கை
பட்டாசு குடோன் வெடி விபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்தினர் நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வேலூர்:
வேலூர் கொணவட்டம் பகுதியில் இருந்த ஒரு பட்டாசு உற்பத்தி குடோனில் கடந்த ஏப்ரல் 7-ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கவியரசன், தீபா, ஷீலா, சிவக்குமார் மற்றும் அவருடைய மனைவி புஷ்ப லதா ஆகிய 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சிவக்குமார்-புஷ்பலதா தம்பதியினருக்கு நிவேதா, நிரோஷா என்ற 2 மகள்கள் மற்றும் சீனிவாசன் என்ற ஒரு மகன் உள்ளனர். சிறு, சிறு பிள்ளைகளான இவர்கள் பெற்றோரை இழந்ததால் அரவணைக்க ஆதரவின்றி தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த தம்பதியினரின் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோருடன் பட்டாசு குடோன் வெடி விபத்தில் பலியான மற்றவர்களுடைய குடும்பத்தினரும் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தனர்.
கலெக்டர் இல்லாததால், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில், பெற்றோரை இழந்து தவிக்கிறோம். எங்களை கவனிக்க ஆளில்லை என்று கூறியிருந்த 3 குழந்தைகளும், பட்டாசு குடோன் வெடிவிபத்தில் பலியான அனைத்து குடும்பத்தினரும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
வேலூர் கொணவட்டம் பகுதியில் இருந்த ஒரு பட்டாசு உற்பத்தி குடோனில் கடந்த ஏப்ரல் 7-ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கவியரசன், தீபா, ஷீலா, சிவக்குமார் மற்றும் அவருடைய மனைவி புஷ்ப லதா ஆகிய 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சிவக்குமார்-புஷ்பலதா தம்பதியினருக்கு நிவேதா, நிரோஷா என்ற 2 மகள்கள் மற்றும் சீனிவாசன் என்ற ஒரு மகன் உள்ளனர். சிறு, சிறு பிள்ளைகளான இவர்கள் பெற்றோரை இழந்ததால் அரவணைக்க ஆதரவின்றி தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த தம்பதியினரின் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோருடன் பட்டாசு குடோன் வெடி விபத்தில் பலியான மற்றவர்களுடைய குடும்பத்தினரும் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தனர்.
கலெக்டர் இல்லாததால், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில், பெற்றோரை இழந்து தவிக்கிறோம். எங்களை கவனிக்க ஆளில்லை என்று கூறியிருந்த 3 குழந்தைகளும், பட்டாசு குடோன் வெடிவிபத்தில் பலியான அனைத்து குடும்பத்தினரும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
Next Story






