என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆத்தூர் அருகே டிராக்டர் மோதி 2 வயது குழந்தை பலி
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது உப்பு ஓடை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். லாரி டிரைவர். இவரது மனைவி ராதிகா (வயது 27). இவர்களுக்கு தீபிகா(4) என்ற மகளும், நவீன்(2½) என்ற மகனும் உள்ளனர்.
இன்று காலை நவீன் வீட்டின் அருகே மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது டிரைவர் பிரகாஷ் என்பவர் உப்புஓடை வழியாக டிராக்டரை ஓட்டிக் கொண்டு வந்தார்.
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நவீன், திடீரென பக்கத்தில் உள்ள உப்புஓடை சாலையில் நடந்து சென்றான். மகன் ரோட்டில் நடந்து செல்வதையும், எதிரே டிராக்டர் வருவதையும் பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைந்தார்.
உடனே ராதிகா, மகனை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக டிராக்டரை நிறுத்துங்கள் என சத்தம் போட்டப்படி வேகமாக சாலையில் ஓடினார்.
அதற்குள் டிராக்டர், ராதிகாவின் கண் முன்பு பயங்கரமாக நவீன் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே நவீன் பரிதாபமாக இறந்தான். மகன் தன் கண்முன் துடித்துடித்து இறந்ததை கண்டு ராதிகா கதறி அழுதார்.
சிறிது நேரத்திற்கு முன்பாக பார்த்து இருந்தால் மகனை காப்பாற்றி இருப்பேனே என கண்ணீர் மல்க கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இறந்தது. டிராக்டர் மோதி 2½ வயது குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்