என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மாதவரத்தில் ரூ.16 லட்சம் மோசடி: வியாபாரி கைது
மாதவரம்:
மாதவரம் பால்பண்ணை பத்மகிரி நகரில் வசித்து வருபவர் பாலசிங்கம். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராஜன், அவரது மனைவி சோபியா ஆகியோர் கோதுமை, பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினர்.
மேலும் தொழிலில் வரும் லாபத்தில் 1 சதவீதம் தருவதாகவும் சொல்லி இருந்தார்கள். ஆனால் கடன் வாங்கி 2 ஆண்டுகள் ஆகியும் பணத்தை அவர்கள் திரும்பி கொடுக்கவில்லை.
இதுபற்றி பாலசிங்கம் கேட்டபோது அவரை ஜெயராஜனும், அவரது மனைவியும் மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து பாலசிங்கம் மாதவரம் பால் பண்ணை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாதவரம் பகுதியில் சுற்றிய ஜெயராஜனை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது வியாபாரம் செய்வதற்காக வாங்கிய பணத்தை ஆடம்பர செலவு செய்து விட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவரது மனைவி சோபியாவை மாதவரம் போலீசார் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்